உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கையில் குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்

ஓரிக்கையில் குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:ஓரிக்கையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில் 1,060க்கும் தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம், மாநகராட்சி சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சி புரம் - உத்திரமேரூர் சாலை, மாநகராட்சி 46வது வார்டு பழைய காலனி சிறுபாலம் அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஓரிக்கையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை