உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சிபுரத்தில் 19ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

 காஞ்சிபுரத்தில் 19ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 19ல் நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட,மாற்றுத்திறனாளிகளுக்குஇரண்டு மாதத்திற்கு ஒரு முறை,கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உத்தரவை தொடர்ந்து, நவம்பர் 19ல், மாலை 4:00 மணிக்கு கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், குறைதீர் முகாம் நடைபெற உள்ளது கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். இம்முகாம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 044- 29998040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !