உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்

காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளான வேணுகோபாலன், வராகர், ரங்கநாதனர், திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர் ஆகிய 5 சன்னிதிகளின் பாலாலயம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளின் திருப்பணி உபயதாரர் நிதி மூலம் துவங்க உள்ளது. இதையொட்டி, ஐந்து சன்னிதிகளுக்கும் பாலாலயம் நேற்று நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டு, பெருமாள் திருவாராதனம், காலை 8:30 மணிக்கு கலாகர்ஷணமும், தொடர்ந்து யாகசாலை, பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு துலா லக்னத்தில் ப்ரோக்ஷ்ணமும், 11:00 மணிக்கு சாற்றுமறை, தீர்த்தம் கோஷ்டி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை