உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாகாளியம்மனுக்கு ஆடி திருவிழா நாளை துவக்கம்

மாகாளியம்மனுக்கு ஆடி திருவிழா நாளை துவக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதியில்,மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் மூன்றாம் ஆண்டு ஆடித் திருவிழா நாளை துவங்குகிறது.காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதி, மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் நடப்பாண்டிற்கான ஆடித் திருவிழா நாளை, காலை 10:00 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்குகிறது.வரும் 18ம் தேதி மாலை, ஜலம் திரட்டும் நிகழ்வும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், காலை 11:30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை