உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி

சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி

உத்திரமேரூர்:அழிசூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ரேசன் கடை அருகே, அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்தது. இதனால், அங்கன்வாடி மையம், இரண்டு ஆண்டுகளாக, அருகிலுள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் போதிய இடவசதி, கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது.இதனால், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உணவு தயார் செய்வதற்கு ஊழியர்கள் தண்ணீர் எடுத்து வர நீண்ட தூரம் செல்கின்றனர்.எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை