மேலும் செய்திகள்
செங்கை அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா
26-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை சார்பில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் மூன்று நாள் கலை திருவிழா போட்டிகள் நேற்று துவங்கின. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மூன்று நாள் கலைத் திருவிழா போட்டிகள், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் உள்ள பி.ஏ.வி., பள்ளி கூட்ட அரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று துவங்கின. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சி யில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்யா, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி, முதன்மைக் கல்வி அலுவலர் நளினி, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் பங்கேற்றனர். கலை திருவிழா போட்டிகளில், 1,222 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
26-Oct-2025