மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
26-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அறம் வளத்தீஸ்வரர் கோவிலில், 52 ஆண்டுகளுக்குப்பின் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி , அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று, காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், ஜலம் திரட்டுதல் ஊர்வலமும், 108 சங்காபிஷேகமும், காலை 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு பால ஷேத்ராலயா வைத்வ சபை குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும். இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.
26-Feb-2025