உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுளில், 884 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை, அண்ணா அரங்கம் எதிரில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு, நான்கு நாட்களாக சாலையில் வீணாகி வருகிறது.இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையும் சேதமடைந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி