உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி

குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி

புத்தேரி: பாக்குபேட்டையில், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கால்நடை தொட்டிக்கு, குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தாததால், வீணாகி வருகிறது என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பாக்குபேட்டையில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி அமைக்கவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்கும் வகையில், பாக்குபேட்டையில் கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி