மேலும் செய்திகள்
தென்னேரி பள்ளி நுாற்றாண்டு விழா
05-Feb-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் கம்மாளம்பூண்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 400-க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் விருந்தினராக பங்கேற்றார். இதில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.பின், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Feb-2025