உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் அபாயம் ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், சிறுமாங்காடு ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக, மின் கம்பி செல்கிறது. இவற்றில் சில மின்கம்பங்கள் சாய்ந்து, விழும் நிலையில் உள்ளது. இதனால், சிறுமாங்காடு சாலையில் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், சிறுமாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இவ்வாழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மின் கம்பி அறுந்து விழுந்து, விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சாய்ந்துள்ள மின் கம்பத்தை, மின் வாரிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். - ச. முத்துக்கிருஷ்ணன், சிறுமாங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை