உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரியில் சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். வண்டலுார்- -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் உள்ள செரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி, காரணித்தாங்கல், பனப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள், தங்களின் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிப்பது இல்லை. மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், இரவு நேரங்களில் நெடுஞ்சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையின் நடுவே படுத்துள்ள மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி, விழுந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மாட்டுத்தொழுவத்தில் அடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி