காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்தில், நாளை, மின் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு கோட்டத்தில், மின் நுகர்வோர் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஒலி முகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்து உள்ளது.