புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பருத்தி குளம் வடக்கு கரை முதல் குறுக்கு தெருவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன. இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியை சூழும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் பருத்திகுளம் வடக்கு கரை முதல் குறுக்கு தெருவில், புதர்மண்டிய மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க கருப்படிதட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.