உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கூட்டுறவு பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

 கூட்டுறவு பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம்: கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வளாகத்தில் நேற்று நடந்த கண் மருத்துவ முகாமிற்கு, கூட்டுறவு சங்க செயலர் பூபாலன் தலைமை வகித்தார். அகர்வால் கண் மருத்துவக் குழுவினர், 55 கூட்டுறவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ