மேலும் செய்திகள்
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
03-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 10ம் தேதி வைகுண்டஏகாதசி உற்சவம் நடக்கிறது. இதில், அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் காட்சியும், தொடர்ந்து கருடசேவை உற்சவமும் விமரிசையாக நடக்கிறது.கருட வாகனத்தில் எழுந்தருளும் வேணுகோபால சுவாமி, முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.உற்சவத்தையொட்டி வரும் 9ம் தேதி இரவு முழுதும், ஹரிபஜனை, திவ்ய பிரபந்தம், கீர்த்தனைகளுடன் பஜனைநடக்கிறது.
03-Jan-2025