உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோமாரி தடுப்பூசி முகாம் ஜன., 3ம் தேதிக்கு மாற்றம்

கோமாரி தடுப்பூசி முகாம் ஜன., 3ம் தேதிக்கு மாற்றம்

காஞ்சிபுரம்:கால்நடைகளுக்குஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்குகால்நடை இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.மேலும், பால் உற்பத்திகடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள்ஏற்படுகின்றன. பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க முடியாத நிலையில் உள்ளனர்.எனவே, கால்நடைகளை தொற்று நோய் களிலிருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப் பூசிபோட வேண்டியது அவசியம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,69,200பசு, எருமை, கன்று ஆகியகால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, டிச., 16 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், டிச., 16க்கு பதிலாக, ஜன., 3ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை