காஞ்சிபுரம் 13 ஊராட்சிகளில் நாளை தணிக்கை கிராம சபை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளன.தற்போது, 15வது சுற்றுக்கு முத்துவேடு, நரப்பாக்கம், வேளியூர், ஈஞ்சம்பாக்கம், ஊவேரி, பால்நல்லுார், குண்ணம், காவனுார், ஒரத்துார், புலியூர், நாஞ்சிபுரம், காவிதண்டலம், ஒரக்காட்டுப்பேட்டை ஆகிய கிராமங்களில், நாளை சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.