உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திம்மராஜாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 26; இவர், கஞ்சா விற்பனை வழக்கு தொடர்பாக, வாலாஜாபாத் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது, ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார்.இவரது பரிந்துரைபடி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, விஜயை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். சிறையில் உள்ள விஜயிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை