உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா பறிமுதல்: 3 பேருக்கு காப்பு

குட்கா பறிமுதல்: 3 பேருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த நாவலுார் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளில், நேற்று முன்தினம் திடீர் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.அப்போது, கடை ஒன்றில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் செழியன், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், குண்ணவாக்கம் பகுதியில் நடத்திய சோதனையில், குண்ணவாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த அப்துல்காதர், 61; சயத் அலி, 30, ஆகியோரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 6,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி