உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஹிந்து அறநிலையத் துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

ஹிந்து அறநிலையத் துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

காஞ்சிபுரம்:புதிய பணியிடம் ஏற்படுத்ததுல், பதவி உயர்வுடன், விருப்பத்தின் பேரிலான பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நவ., 13 முதல், 19 வரை ஒரு வாரத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.அதன்படி. மாநிலம் முழுதும் ஹிந்து சமய அறநிலையத் துறையில் கண்காணிப்பாளர், ஆய்வாளர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என, அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை