உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதர் கோவிலில் பவித்ர உத்சவம் துவக்கம்

வரதர் கோவிலில் பவித்ர உத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான ஆவணி மாதம் பவித்ர உத்சவம்துவங்கியது. இன்று, பவித்ர அதிவாஸம் நடைபெறுகிறது. இதில், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மூலவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, பவித்ரம் சாற்றுதல் வைபவம் நடைபெறும். இதில், கோவில் கிளி மண்டபத்தில் அமைந்துள்ள யாகசாலையில் இரு வேளையும் ஹோமம் நடைபெறும். நாளை முதல், வரும் 12ம் தேதி வரை பவித்ர உத்சவத்தையொட்டி, தினமும், மாலை 5:30 மணியளவில் பெருமாள், உபயநாச்சியார் திருவடி கோவில் புறப்பாடு நடைபெற்று, அங்கிருந்து கோவிலில் கிளி மண்டபத்திற்கு வந்தடைவார். பெருமாள், உபயநாச்சியார் முன்னிலையில் மாலை நேர ஹோமம் நடைபெறும். பவித்ர உத்சவம் நிறைவு நாளான, வரும் 13ம் தேதி, மாலை 5:30 மணிக்கு பெருமாள் மாட வீதி புறப்பாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ