உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவில் வெளி பிரகார தரையில் உள்ள சூடு காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.இதையடுத்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், மூலவர் சன்னிதி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு செல்லும் வெளி பிரகாரத்தின் பாதையில், தேங்காய் நார் கம்பளம் அமைக்கப்பட்டுள்ளதால். பக்தர்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.ஆனால், குளக்கரை வழியாக அரச மரத்தின் கீழ் அமைந்துள்ள நாகசிலைகள் அமைந்துள்ள பகுதிக்கும், அருகில் உள்ள அன்னதான கூடத்திற்கு செல்லும் வழியில் தேங்காய் நார் கம்பளம் அமைக்கப்படவில்லை. இதனால், இவ்வழியாக செல்வோர் தரையில் உள்ள சூடு காரணமாக நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனவே, கச்சபேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடத்திற்கு செல்லும் பாதையில், பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், தேங்காய் நார் கம்பளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை