மேலும் செய்திகள்
கால்நடை மருந்தகம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
21-Sep-2024
சிறுகாவேரிபாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜெ.ஜெ., நகரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2019ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.ஆனால், தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில், குடிநீர் தொட்டியை சுற்றிலும் புதர்மண்டி வீணாகி வருகிறது.எனவே, கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்தி, தொட்டியில் முறையாக தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
21-Sep-2024