மேலும் செய்திகள்
இசைப்பள்ளி சிறப்பு நிகழ்ச்சி
15-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் சேர, மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான, குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.இசை பள்ளியில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது.இங்கு 12 - 25 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.இசைப் பள்ளியில் பயின்ற மாணவ - மாணவியருக்கு வளாக நேர்காணல் மூலம் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவ - மாணவியர் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகின்றன.மேலும் விபரம் வேண்டுவோர் இசைப் பள்ளி அலுவலகத்தை, 94425 72948 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
15-Jul-2025