உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்

 வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்

வாலாஜாபாத்:தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ - மாணவியர் தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளனர். தமிழ்நாடு பாரம்பரிய வில்வித்தை சங்கம் சார்பில் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கும் மாநில அளவிலான வில்வித்தை போட்டி திண்டுக்கல்லில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தமிழத்தில் 20 மாவட்டங்களில் இருந்து, 320 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி குழுவினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களது ஒருங்கிணைப்பில் காஞ்சிபுரம், நாய்க்கன்பேட்டை, வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், 16 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஹைதராபாதில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்று தங்கம், வெள்ளி வென்று நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினர். வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று மாணவ - மாணவியரை பாராட்டி, சிறப்பு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை