உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகையில் இருந்து பிரிந்து, எழிச்சூர் வழியாக பாலுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணியர், நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக சென்று வருகின்றனர்.கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்க செல்லும் கர்ப்பிணியர் அவதிபட்டு வருகின்றனர்.மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுத்து காயமடைந்து வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப. தியாகராஜன்,எழிச்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி