உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. காலை 9:45 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அய்யங்கார்குளம்:

காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில், கிராமத்தினர் சார்பில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.நேற்று காலை 7:30 மணிக்கு கோபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி