உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்,கிடங்கரை கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, பொற்பந்தல் ஊராட்சி, கிடங்கரை கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், கடந்த மாதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, பிரவேச பலி ஆகியவை நடந்தது. காலை 10:15 மணிக்கு யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட கலச நீரை கோவில் மீதுள்ள அம்மன் சிலை மீது ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை