உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, அய்யப்பா நகரில், அய்யனார் கோவில் வளாகத்தில், நற்றுணை நாதர் சிவன் கோவில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9 ம் தேதி காலை 11:00 மணிக்கு, பந்தக்கால் நடுதல், வேள்விசாலை அமைத்தல் பணி துவங்கி நடைபெற்றது. கடந்த 14ம் தேதி இரவு 8:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜை நடந்தது.நேற்று காலை 6:30 மணிக்கு நான்கால வேள்வி பூஜை நடந்தது. 7:30 மணிக்கு புனிதநீர் நிரப்பிய திருக்குடங்கள் புறப்பாடும் தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் நற்றுணை நாதருக்கு சிறப்பு அபிஷேக,அலங்காரமும், மஹாத தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ