உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பின்றி மகாதேவிமங்கலம் குளம்

தடுப்பின்றி மகாதேவிமங்கலம் குளம்

காஞ்சிபுரம்:மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில் இருந்து, குணகரம்பாக்கம் கிராமம் வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை செல்கிறது.இந்த சாலை வழியாக, சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து, குணகரம்பாக்கம் கிராமம் வழியாக, செல்லம்பட்டிடை, எடையார்பாக்கம், கோட்டூர், கப்பான்கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனம், நான்குசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.மகாதேவிமங்கலம் அருகே, ஆபத்தான முறையில் சாலையோர குளம் உள்ளது. இந்த குளத்தை ஓட்டி இருக்கும் சிறுபாலத்தின் ஓரம் போதிய தடுப்பு இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, குளம்யோரம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை