9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை
சென்னை: சென்னையில், சாலையோரம் துாங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கைதான நபருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிந்தாதிரிபேட்டையில் சாலையோரம் துாங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு, 2023ல், சாகுல் அமீது என்ற காசிம் என்பவர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் தாய் சிந்தாதிரிபேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் விசாரணை நடத்தி, சாகுல் அமீது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாகுல் அமீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 75,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.