உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம், : வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செல்லும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை கால்வாய், தும்பவனம் கால்வாய், மஞ்சள் நீர் கால்வாய்களில், செடி, கொடிகள், பிளாஸ்டிக் குவியல்கள் புதர்போல மண்டியிருந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவையடுத்து துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது. இதில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது.வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் கால்வாய் துார்வாரும் பணி முழுமை பெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி