காலிமனையில் மழைநீர் தேக்கம்உப்புகுளத்தில் கொசு தொல்லை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட உப்புகுளம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால், உப்புகுளம் பகுதியில் குடியிருப்பை சூழ்ந்த காலிமனைகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லாததால், காலிமனைகளில் குட்டைபோல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பபகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், மழைநீரில் தஞ்சமடைந்துள்ள பாம்பு, தேள், விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, உப்புகுளம் பகுதியில் காலிமனையில் தேங்கியுள்ள மழைநீரை அருகில் உள்ள அல்லாபாத் ஏரிக்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.