உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டுபெரும்பேடு சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

குண்டுபெரும்பேடு சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:சேதமடைந்து குண்டும் குழியுமான குண்டுபெரும்பேடு சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், கொளத்துாரில் இருந்து பிரிந்து வெள்ளாரை, குண்டுபேரும்பேடு வழியாக கண்ணந்தாங்கல் செல்லும் சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கண்ணந்தாங்கல், குண்டுபெரும்பேடு, கடுவஞ்சேரி உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் பல்லாங்குழியான சாலையில் செல்லும் போது, இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி