உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒட்டந்தாங்கல் சாலை படுமோசம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஒட்டந்தாங்கல் சாலை படுமோசம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் நாய்க்கன்குப்பம் கிராமத்தில் இருந்து, ஒட்டந்தாங்கல் வழியாக தென்னேரி செல்லும் சாலை உள்ளது. நாய்க்கன்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி தென்னேரி சென்று, அங்கிருந்து சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், ஒட்டந்தாங்கல் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவு உள்ளது. வளைவு பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது.எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைத்து, விபத்துகள் எற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !