உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் சகதியாக மாறிய சாலை வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

காஞ்சியில் சகதியாக மாறிய சாலை வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேதாசலம் நகர், வினோபாஜி தெருவில் திருமண மண்டபம், பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன. வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமுள்ள சாலையாக உள்ளது.கடந்த மாதம் பெய்த மழைக்கு சேதமான இச்சாலையை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், சாதாரண மழைக்கே சகதி சாலையாக மாறி விடுகிறது. இதனால், சகதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, சகதியாக மாறியுள்ள வினோபாஜி தெருவை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை