உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை பாலாற்று பாலத்தில் விரிசல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஓரிக்கை பாலாற்று பாலத்தில் விரிசல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்று பாலத்தின் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், ஓரிக்கைக்கும், குருவிமலைக்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே, 25 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாக உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல் மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சாலையின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி