உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 19-வது வார்டு ஆனந்தாபேட்டையில், புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசனிடம் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., ஒதுக்கீடு செய்த 18.10 லட்சம் ரூபாயில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. புதிய ரேஷன் கடையை காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி அதிகாரிகள், வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை