உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மூளைத்தண்டு ரத்தநாள வீக்கத்திற்கு நெக்ஸ்டென்ட் பொருத்தி மியாட் சாதனை

மூளைத்தண்டு ரத்தநாள வீக்கத்திற்கு நெக்ஸ்டென்ட் பொருத்தி மியாட் சாதனை

சென்னை : மூதாட்டியின் மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட 'அன்யூரிஸம்' என்ற வீக்கத்திற்கு, நவீன உயர் தொழில்நுட்ப சிகிச்சை அளித்து, மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இது குறித்து, மருத்துவமனையின் நரம்பியல் இடையீட்டு சிகிச்சை துறை தலைவர் கார்த்தி கேயன் கூறியதாவது:ஆவடியைச் சேர்ந்த மூதாட்டி உஷாராணி, 65, பக்கவாத அச்சுறுத்தல் பாதிப்புடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவரது மூளை தண்டுவடத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியதமனியான 'பேசிலர் ஆர்ட்டரி' மற்றும் மூளை, கண்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும், 'இன்டர்னல் கரோடிட் ஆர்ட்டரி' என்ற முக்கிய ரத்த நாளத்திலும் வீக்கம் இருப்பது தெரிந்தது.'நெக்ஸ்டென்ட்' என்ற நவீன ஸ்டென்ட் உபகரணம், சிறுதுளை வாயிலாக பாதிக்கப்பட்ட இடத்தில் மூதாட்டிக்கு பொருத்தப்பட்டது. தலைகீழாக கவிழ்த்தப்பட்ட குடைபோல உள்ள அச்சாதனம், 'எண்டோவாஸ்குலர்காய்லிங்' சுருளை விலகாமல் பற்றி கொள்வதுடன், நாளங்களில் ரத்த ஓட்டம்தடையின்றி செல்லஉதவும். இச்சிகிச்சையின் வாயிலாக, மூதாட்டி நலம் பெற்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.குணமடைந்த உஷாராணி மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாசை சந்தித்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை