உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடம் அகற்ற பெற்றோர் கோரிக்கை

பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடம் அகற்ற பெற்றோர் கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், சிதிலமடைந்து பயன்பாட்டில் இல்லாத விஷ்ணு காஞ்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், விஷ்ணு காஞ்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது.இப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கூரைக்கு ஓடு வேயப்பட்ட பழைய கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதிதாக 'கான்கிரீட்' கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும், பயன்பாட்டில் இல்லாத சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய கட்டடம் அகற்றப்படாமல் உள்ளது.சிதிலமடைந்த பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தால் பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள விஷ்ணு காஞ்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், பயன்பாட்டில் இல்லாமல் பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் பயிலும் மாணவ - -மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி