உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 3௫6 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனுக்களை வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு கோரி பல்வேறு வகையான மனுக்கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த முகாமில் 356 பேர் மனுக்கள் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை