உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு

மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு

ஸ்ரீபெரும்புதுார்:வங்கக்கடலில் உருவான ‛பெஞ்சல்' புயலால், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம், காலை முதல், மாலை வரை சராசரியாக 13 செ.மீ., மழை பெய்தது.ஸ்ரீபெரும்துார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த தொடர் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.அதேபோல, ஸ்ரீபெரும்பதுார் - குன்றத்துார் சாலை, மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.இதையடுத்து, மழையால் சேதமான சாலையினை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், கச்சிப்பட்டு, பட்டுநுால்சத்திரம் பகுதிகளில், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சீரமைப்பு பணி நடந்து வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை