உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

வாலாஜாபாத்,வாலாஜாபாத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை உள்ளது.இச்சாலை வழியாக ஊத்துக்காடு, கட்ட வாக்கம்,தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள்உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும் சுங்குவார்சத்திரம், வாலாஜா பாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், இச்சாலையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களில், தனியார்தொழிற்சாலைகள்இயங்குகின்றன. அத்தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இரவு, பகல் என, 'ஷிப்ட்'முறையில் பணியாற்று கின்றனர். இரவு நேரங்களில்,இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வரும் தொழிலாளர்களுக்கு, சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலை பகுதிகளில், மர்ம நபர்கள் சுற்றி திரிவதால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் போது அச்சத்தைஏற்படுத்துவதாகதொழிலாளர்கள் கூறி வருகின்றனர். எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில், போக்குவரத்து ரோந்து வாகனம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் இருக்க அப்பகுதியைச் சேர்ந்த பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை