உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாத்தணஞ்சேரி ஏரியை பராமரிக்க கோரிக்கை

சாத்தணஞ்சேரி ஏரியை பராமரிக்க கோரிக்கை

சாத்தணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தில், 110 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.இந்த ஏரி மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், தண்ணீரைக் கொண்டு சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 200 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசனம் பெறும்.கடந்த 2020-- 21ம் ஆண்டு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், 68.70 லட்சம் ரூபாய் செலவில், இந்த ஏரியின் கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும் ஏரி துார்வாறுதல் மற்றும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால், ஆண்டு தோறும் பருவமழைக்கு ஏரியில் குறைவான அளவு தண்ணீரே சேகரமாகி, அடுத்த சில நாட்களில் வறண்டு போகிறது. இதனால், ஏரி தண்ணீரை நம்பி சாகுபடி செய்ய இயலாமல், கடந்த ஆண்டுகளில் கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணற்று வாயிலாக மட்டுமே இப்பகுதி விவசாயிகள் பயிரிடுகின்றனர். தற்போது சாத்தணஞ்சேரி ஏரி முழுதும் கருவேல மரங்கள் உள்ளிட்ட பல வகை முள் மரங்கள் வளர்ந்து காடாக காட்சி அளிக்கிறது. இதனால், சாத்தணஞ்சேரியில் ஏரி இருந்தும் விவசாயத்திற்கும் பயன்பாடு இல்லாத நிலை உள்ளது. எனவே, ஏரியில் வளர்ந்துள்ள முள் மரங்களை வேரோடு அகற்றி, துார்வாரி சீர் செய்ய வேண்டும். ஏரிக்கான வரத்து கால்வாய்களை பராமரிப்பு பணி செய்து, அடுத்த பருவ மழைக்கு ஏரி நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ