உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பு இல்லாத ராஜாங்குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

பராமரிப்பு இல்லாத ராஜாங்குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

பெரியாநத்தம்: செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப்பின்றி உள்ள ராஜாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பெரியாநத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியம், பெரியாநத்தம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் அருகில் ராஜாங்குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், இக்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 2021ம் ஆண்டு, 12 லட்சத்து 52,729 ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டது. இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயிலும், குளத்திலும் செடி, கொடிகள், வளர்ந்துள்ளன. இதனால், கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு குளம் முழுமையாக நிரம்பவில்லை. எனவே, செடி, கொடிகள் வளர்ந்து வீணாகும் ராஜாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பெரியாநத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !