மின் அலுவலக நுழைவாயிலில் குட்டை போல தேங்கிய கழிவுநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, பஞ்சுபேட்டை பெரிய தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மட்டுமின்றி மின்வாரிய துணை மின் நிலையம், திரவுபதியம்மன் கோவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.ஏகாம்பரநாதர் கோவில், கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குரவத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர், பஞ்சுபேட்டை துணை மின்நிலையம் நுழைவாயிலில், இரு நாட்களாக கழிவுநீர் குட்டை போல தேங்கியுள்ளது.இதனால், மின்நிலையத்திற்கு சென்ற மின் ஊழியர்களும், பொதுமக்களும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுளளது. இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பஞ்சுபேட்டையில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.