கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் போன் திருட்டு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 35. இவர், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, ஆர்.கே., எனும் பெயரில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பிரேம் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, ஷெட்டரின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 10 லட்சம் மதிப்பள்ள 50க்கும் மேற்பட்ட மொபைல் போன் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.