மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
15-Sep-2025
ராமானுஜர் வர்ண தர்மத்தை மீறினாரா?
06-Sep-2025
செவிலிமேடு:ஆவணி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
15-Sep-2025
06-Sep-2025