மேலும் செய்திகள்
கோழிக்கோடு பல்கலை கராத்தேவில் சாம்பியன்
10-Jan-2025
சென்னை :சென்னையை அடுத்த, மேலக்கோட்டையூரில் நடந்த, தென்மேற்கு மண்டல மகளிர் கராத்தே போட்டியில், கேரளாவின் கோழிக்கோடு பல்கலை, சாம்பியன் பட்டத்தை வென்றது.பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசன்ட் பல்கலை சார்பில், தென் மேற்கு மண்டல மகளிர் கராத்தே போட்டி, கடந்த 6ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டிகள், வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள கிரசன்ட் பல்கலை வளாகத்தில் நடந்தன.போட்டியில், தென்மேற்கு மண்டல அளவில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 88 பல்கலையில் இருந்து, 450 மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.இதில், 'கட்டா, குமிட்' ஆகிய இருபிரிவிலும் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன. முதல்நாள் போட்டியை, இந்திய பல்கலைகள் கூட்டமைப்பின் இணை செயலர் பல்ஜித் சிங் சேக்கான், கிரசன்ட் பல்கலையின் துணைவேந்தர் முருகேசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.மூன்று நாட்கள் நடந்த அனைத்து போட்டிகள் முடிவில், இருபாலரிலும் சேர்த்து, கேரளாவின் கோழிக்கோடு பல்கலை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாமிடத்தை கர்நாடகாவின் ஜெயின் பல்கலை வென்றது. கேரளா பல்கலைமற்றும் தமிழகத்தின்கிரசன்ட் பல்கலை, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றி, அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு, கிரசன்ட்பல்கலை பதிவாளர் ராஜா ஹூசைன் பரிசுகளை வழங்கினார்.
10-Jan-2025